Poll Creator

Thursday, 30 May 2013 - 0 comments

கல்லூரி காதல்கள்

இருக்கும் அரைமணி நேர
உணவு இடைவெளியில்
நூலகங்களில் ஒளிந்துகொள்கிறாய்,
நீ புத்தகங்களை தேடுகிறாய்
நான் உன்னை தேடுகிறேன்! 

#கல்லூரி காதல்கள்

கல்லூரிக்காதல்கள்

எனக்காக தான் நீயும்
உனக்காக தான் நானும்
கேண்டின் வருகிறோம்
என நம் நண்பர்கள்
பிதற்றிக்கொள்வது எல்லாம்
சச்சின் அவுட் ஆனா இந்தியா ஜெயிச்சுரும்
என்பதைப்போல தான்!


#கல்லூரிக்காதல்கள்

கல்லூரி காதல்கள்

உன்னை முதன் முதலில்பார்த்த போது 
வேண்டிக்கொண்டது இதுதான்
”இவள் சீனியராக மட்டும் 
இருந்துவிடக்கூடாதென்று”


#கல்லூரி காதல்கள்

கல்லூரி காதல்கள்

உனது வருகையால் தான்
அதீத சிறப்பு கவனம் பெற்றன,
காலாவதியாக போகும் நிலையில்
இருந்த கல்லூரி பேருந்துகள்.

#கல்லூரி காதல்கள்

கல்லூரி காதல்கள்

கால்குலேட்டர் இரவலில்
தொடங்கி, ரெகார்டு நோட்டுக்கு
படம் வரைய சொல்வது வரை எல்லாமே
யதேச்சையான சந்திப்புக்களுக்கான
முறையான திட்டமிடல்கள்

#கல்லூரி காதல்கள்

கல்லூரிகாதல்கள்

நீ என்னை கடந்து செல்கையில்
ஏலம் விடப்படும் உன் பெயர்.
ஆணாதிக்கத்தின் உச்சம் 

#கல்லூரிகாதல்கள்

கல்லூரிக்காதல்கள்

முத்தமிழ் விழாவின்
ஓவியப்போட்டியில்
முதல் பரிசு உனக்குத்தான்.
எனக்கு சந்தேகம்,
போட்டி நடத்தப்பட்டது,
வரைந்ததற்கா? இல்லை
வரைந்தவர்களுக்கா ?

#கல்லூரிக்காதல்கள்

கல்லூரி காதல்கள்

உன் நெஞ்சோடு அணைத்து வைத்திருந்த
நோட்டுப்புத்தகத்தின் அட்டையை
அலங்கரித்த சூர்யாவிற்கு
திருமணம் நடந்ததெல்லாம்
என் போன்றோரின் வேண்டுதல் தான் 
# கல்லூரி காதல்கள்

கல்லூரி காதல்கள்

தொடர்ச்சியாக பத்து நாட்கள்
உன் பின்னால் சுற்றிய போதும்
கழற்றி விடப்பட்டதன் 
காரணம் தெரியாதவர்கள் 
என் நண்பர்கள்.
உன் பின்னால் சுற்றிய மூன்றாம் நாளே
உனக்காக தான் சுற்றுகிறேன் என
அடையாளம் காட்டியவள்
உன் தோழி 
# கல்லூரி காதல்கள்
உன்னிடம் பேசிவிட வேண்டுமென 
முடிவெடுத்த பின்னர்
ஐந்து ரூபாய் சாக்லேட்டோடு
வந்து சொன்னேன்
“எனக்கு இன்னைக்கு 
பொறந்த நாள் ”என்று-அட நிஜமாகவே
நல்லதோர் ஆரம்பம் தான்

 #கல்லூரி காதல்கள்

கல்லூரிகாதல்கள்

இறைவா என் நண்பர்களிடமிருந்து
இவளை காப்பாற்று,சீனியர்களை
நான் பார்த்துக்கொள்கிறேன்

 #கல்லூரிகாதல்கள்

கல்லூரி காதல்கள்

பெண்கள் ஓய்வு அறைக்கு
போகும் வழியில் தான் 
அந்த குடிநீர் குழாய்.
கூட்டம் நிரம்பியே இருக்கும் 
அந்த குழாயில் எவனும் தாகத்திற்காக
குடிக்கவில்லை தண்ணீர். #கல்லூரி காதல்கள்

நான் இப்படித்தான்






நீ 
எப்படி 
வேண்டுமானாலும் 
இருந்துக்கொள்....... 

நான் 
இப்படித்தான்...... 

ஒருதலையாக 
என்றாலும் 
ஓயாமல் 
காதலிப்பேன்.... 
உன் நினைவுகளை!!!!

தோழியே பதில் சொல்



ஒவ்வொரு விடியலும் 
ஏமாற்றி கொண்டேயிருக்கிறது 
உன்னை என்னிடம் 
காட்டாமல் ! 

அலைபேசியின் ஒவ்வொரு 
சிணுங்கலும்அழவைத்துக் 
கொண்டேயிருக்கிறது ! 
அழைப்பில் நீ இல்லை என்பதை 
எண்களின் வழியே என்னிடம் காட்டிக் காட்டி ! 

பாலைவனத்தில் தவித்த போது 
நீராய் வந்தாய் ! 
பாவம் செய்து துடித்த போது 
மன்னிப்பாய் நின்றாய் ! 

தூக்கமின்றி தவித்த நாட்களில் 
தாலாட்டும் தாயாய் வந்தாய் ! 
தூக்கம் தாளாது அழுத போது 
கண்ணீர் துடைக்கும் கரங்கள் தந்தாய்! 

காதலிக்க கற்று தந்தாய் 
கடவுளிடம் கூட்டிசென்றாய்! 
கவிதைகளைப் போற்றி வந்தாய்! 
கவலைகளைப் போக்கி நின்றாய் ! 

இப்படியே வீழ்ந்து கிடந்தால் 
உன்னுடன் பேச மாட்டேனென்று 
வீம்பு கொண்டாய்! 

வேலைதேடு என்று 
என்னிடம் தினம் தினம் 
வம்பு செய்தாய் ! 

வேள்விகள் ஏதுமின்றி 
வாழ்வியல் கற்று தந்தாய்! 

தோழியே நீ இல்லாத வாழ்க்கையை 
வாழ்வது எப்படி என்று 
ஏன் சொல்லாமல் சென்றாய்? 

பௌர்ணமி நிலவாய் 
என்னுடன் இருந்தவளே.! 
ஏன் நிரந்தர அமாவாசையாய் 
என்னைவிட்டு நீங்கிச் சென்றாய் ?! 

ஒரே ஒருமுறை தோழியே வந்துவிடு ! 
என் கேள்விக்கெல்லாம் பதிலைத் தந்துவிடு !


Wednesday, 15 May 2013 - , 0 comments

கண்கள் மட்டும்



மனதின் உணர்ச்சிகள் 
இதயத்தில் கேள்விகளை எழுப்பும்போது 
உதடுகளின் பதில் மௌனமாய் இருக்கும்போது 
கண்கள் மட்டும் ஏன் கண்ணீரை பரிசளிக்கிறது?

Friday, 3 May 2013 - 0 comments

தூங்காமல்










நான் உன் நினைவுகளை 

தூங்காமல் நினைத்து கொண்டு இருக்கிறேன்... 

ஆனால் நீயோ என்னை நினைக்காமல் 

தூங்கிகொண்டு இருக்கிறாய்..

கனவு காதலன்

கண்களால் தொடங்கி கவிதையாய் வளர்ந்து நாளும் உன்னை ரசித்து தினம் கனவில் உன்னோடு வாழும் நான் 
காலையில் தொடங்கி மாலை வரை உன்னை நினைத்து உன்னால் கவிதை எழுதி இரவானதும் நுழைகிறேன் என் கனவுலகில் 
ஏமாற்றம் மட்டும் கண்டதில்லை எனக்கான அந்த உலகில் நான் நினைத்தேன் நீ நடத்தினாய் 
ஏனடி நிஜத்தில் மட்டும் ஏங்க வைக்கிறாய் நிஜமாய் நேசிக்கிறேன் இப்போதெல்லாம் 
நீ கனவில் வருவதை மட்டும்
பார்த்துகொள் கனவுகாதலி நிஜகாதலி ஆகாமல் 


இப்படிக்கு 

கனவு காதலன்
ஆனந்தன்