Poll Creator

தோழியே பதில் சொல்



ஒவ்வொரு விடியலும் 
ஏமாற்றி கொண்டேயிருக்கிறது 
உன்னை என்னிடம் 
காட்டாமல் ! 

அலைபேசியின் ஒவ்வொரு 
சிணுங்கலும்அழவைத்துக் 
கொண்டேயிருக்கிறது ! 
அழைப்பில் நீ இல்லை என்பதை 
எண்களின் வழியே என்னிடம் காட்டிக் காட்டி ! 

பாலைவனத்தில் தவித்த போது 
நீராய் வந்தாய் ! 
பாவம் செய்து துடித்த போது 
மன்னிப்பாய் நின்றாய் ! 

தூக்கமின்றி தவித்த நாட்களில் 
தாலாட்டும் தாயாய் வந்தாய் ! 
தூக்கம் தாளாது அழுத போது 
கண்ணீர் துடைக்கும் கரங்கள் தந்தாய்! 

காதலிக்க கற்று தந்தாய் 
கடவுளிடம் கூட்டிசென்றாய்! 
கவிதைகளைப் போற்றி வந்தாய்! 
கவலைகளைப் போக்கி நின்றாய் ! 

இப்படியே வீழ்ந்து கிடந்தால் 
உன்னுடன் பேச மாட்டேனென்று 
வீம்பு கொண்டாய்! 

வேலைதேடு என்று 
என்னிடம் தினம் தினம் 
வம்பு செய்தாய் ! 

வேள்விகள் ஏதுமின்றி 
வாழ்வியல் கற்று தந்தாய்! 

தோழியே நீ இல்லாத வாழ்க்கையை 
வாழ்வது எப்படி என்று 
ஏன் சொல்லாமல் சென்றாய்? 

பௌர்ணமி நிலவாய் 
என்னுடன் இருந்தவளே.! 
ஏன் நிரந்தர அமாவாசையாய் 
என்னைவிட்டு நீங்கிச் சென்றாய் ?! 

ஒரே ஒருமுறை தோழியே வந்துவிடு ! 
என் கேள்விக்கெல்லாம் பதிலைத் தந்துவிடு !


0 comments:

Post a Comment