Poll Creator

Thursday, 25 April 2013 - 0 comments

சிரிக்கும் பூக்கள்




வழக்கம் போல் நீ ஏற்க மாட்டாய் 

என தெரிந்து இருந்தும் கூட 

ஏன் இத்தனை சிரிப்பு உன்னை சேர

 என் கைகளில் காத்து கொண்டு இருக்கும் 

இந்த பூக்களுக்கு..!


மறந்து விடு என்று...!!!





இறந்து விடு என்று சொல்...!! 
மறுபடியும் பிறந்து வருவேன்.. 
மறந்து விடு என்று...!!! 
சொல்லாதே ஒரு நொடி கூட 
இருந்துவிடமாட்டேன் ...!!!


நீ என்னை உதறி விட்டாய் ...!







வலிகளை வரிகளாக்கி கவிதை  
எனக்குள்ளேயே ரசித்துப் பார்கிறேன் 
இது கண்கெட்ட பின் சூரிய உதயமாக இருக்கலாம் 
காலத்தை கடத்த ஞானமும் தேவை அல்லவா 

ஆம் அன்பே 
அன்று விளையாட்டுக்கோ காலம் கடத்தவோ 
உன்னை காதல்செய்யவில்லை 

ஆனால் இன்று என் காலத்தை கடத்துவதற்காக 
காதல் செய்கிறேன் உன்னைஅல்ல உன்நினைவுகளை நீ என்னை உதறி விட்டாய் 
ஆனால் என் கவிதையை ரசிப்பதாக அறிந்ததால் 

கண்ணீரால் கவிதை ...?




கண்களால் கவிதை எழுதி ... 
என் மூச்சிடம் கொடுத்து விட்டேன் ... 
இதயக்கதவு ஆவலோடு திறந்திருந்தது ... 
உன் பதில் வந்தது ....? 
இப்போ கண்ணீரால் கவிதை எழுதுகிறேன் ...!


- 0 comments

உணர்வாயா?? நீ





புத்தி கெட்ட நீ 
என்னை எத்திவிட்டு 
ஏளனம் செய்கிறாய் 
ஏங்குகிறேன் 
ஏன் இந்த நிலை 
எனகென்று உன்னால் ,,,, 
உயிரற்ற உடல் போல 
உறங்காமல் 
கிடக்கிறேன் உணர்வாயா??நீ 

நீயும் நானும் ....?




உன்னால் வரும் வலிகள் -நீ 
வரும்போது வருவதில்லை -நீ 
போகும் போதும் போவதில்லை ... 

நீ- வந்து போனபின் தான் .. 
நீ - சொன்ன வார்த்தைகள் வலியாய் வலிக்குது... 

எப்போது வருவாய் என எதிர் பார்க்கிறேன் -நான் 
தந்த வலிகளைசுகமாக ஏற்கிறேன் -நான்

- 0 comments

காதல் தோல்வி











இந்த உலகில் காதல் தோல்விக்கு, 


முக்கிய காரணம்! 

“சொல்லி மறுக்கப் படுவது அல்ல” 

“சொல்லாமல் மறைக்கப் படுவது தான் ”